அவளுக்கான கவிதைகள்
Wednesday 20 November 2013
Tuesday 30 July 2013
எழுதி எழுதி களைத்தும்
நிரப்படாதது ...
எனது விடைத்தாள் .
கிழித்தெறிந்து போட்ட
உன் மௌனம் .
என் கவிதைகள்
எதுவும் உன்னிடம்
பேசிவிடப்போவதில்லை
அவற்றை நீ
பார்க்காதவரை .
மறக்க நினைத்து
அர்த்தமற்று போகின்ற
என் ஒவ்வொரு செயல்களும்
மறுபடி புதைக்கின்றன
உன் நினைவு
நந்தவனத்தில் .
உன்னை
நினைக்க ...நினைக்க
என் தலையணை
ஈரம் மட்டும்
குறைவதாய் இல்லை .
கால்கள் சோர்வுற ...
கண்கள் வலிக்க...
காத்திருந்த பொழுதுகள் .
உன் புரிதல் இல்லாத
வெறுமனே தரிசனம்
செய்துவிட போவதில்லை
ஒன்றும் .
போதுமானதாய் இருக்காதது
உன் சந்திப்பு .
விரும்பிய பொருள்கேட்டு
வீரிட்டு அழும்குழந்தையாய்
மண்ணில் கிடந்தது
அரற்றி புரண்டு
கத்தலாம் போலிருக்கு ...
வரப்போகாத
உன் வருகையை எண்ணி .
---------------------------------பாரதிபிரியன்
அந்த முதல் சந்திப்பு ...............
உன்னை முதன்முதல்
நேரில்காணும் ஆவலில்
எங்கு சந்திக்கலாம்
என்கிறேன் .
தோழி ஒருத்தியின்
திருமண வரவேற்பிற்கு
மாலை வேளையில்
வருவதாய் சொன்னாய் .
இடம் எது என தெரியாமல்
நீ சொன்ன தகவலில்
ஊரில் உள்ள மண்டபங்களில்லெல்லாம்
சுற்றித்திரிந்து ..
கடைசியில் வந்து சேர்ந்தேன் .
உனக்கு நினைவில் இல்லாத
மண்டபத்தின் பெயரால்
இத்தணை அலைகழிப்பு ...
ஆர்வத்தை இன்னும்
அலைபோல் ஆர்பரிக்கச்செய்தது .
----------------------------------பாரதிபிரியன்
Monday 29 July 2013
நினைவுகளை
வார்த்தைகளால்
பதிக்க
நான் செய்யும்
முயற்சி .
இருள் மூடிய வேளையில்
தூக்கம் வராமல் புரண்டு ...
உறுத்தியதால்
எழுதின வரிகள் .
எழுத முற்படுகையில்
மீண்டும் மூழ்கிப்போகிறேன்
அந்த ஆரம்ப காலத்து
நினைவுகள் .
முதல் பேச்சு...........
அறிமுக வார்த்தைகள் ...
முகம் தெரியாத
குரல் மட்டுமே பதிந்த
அந்த நாட்களின்
பரவச பொழுதுகள் .
சோர்வும்...........
நிம்மதியின்மையும்...
மனதில் பதிந்து
என்னை வாட்டுகையில்
உன் உரையாடல்
என்னை மீண்டும் புதுபிக்க
சிலிர்த்து எழுகிறேன் .
நான் சொன்னேன்
உண்மை தான் ...
உன்னை நேரில்
சந்திக்க மாட்டேன் .
உன் நோக்கம்....
உன் கனவு பூர்த்தியாகாமல்.
எனது வாழ்வு ..
உன் மின்னஞ்சல் முகவரியும் ..
முகநூலில் உன் புகைப்படமும்
காணும் வரை
நிச்சயம்
நிதானமாய் இருந்திருக்கும் .
உன்னுடன் உரையாடுகையில்
நீ உயரவேண்டும்
என்ற தாக்கமும்
உன் நலனில்
அக்கறையும் மிகுந்தது
உண்மை .
உன் புகைப்படத்தை காணும்வரை ..
பிறகு...........
நேரில் பார்க்க ..பார்க்க ..
உன்னோடு பயணிக்க
உன்னோடு நேரில்
உணவருந்தும் போதெல்லாம் ....
நீ எனக்கானவள்
என உள்மனம்
என்னை உசுப்பேற்றியது .
Subscribe to:
Posts (Atom)